search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார் மனு"

    • ஊராட்சி மன்ற தலைவரின் கையொப்பங்களை போலியாக அரசு பதிவேடுகளில் போடுகிறார்.
    • ஊராட்சி செயலாளரும் உடந்தையாக செயல்படுகிறார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட பத்ர அள்ளி ஊராட்சியின் துணைத் தலைவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம் பத்ர அள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பணியாற்றி வருகிறேன். ஊராட்சி மன்ற தலைவராக சீரங்காயி பஞ்சாயத்து தலைவராக உள்ளார். ஆனால் இதுவரை ஊராட்சி மன்ற தலைவராக இவரது கணவர் தங்கராஜ் செயல்பட்டு வருகிறார்.

    ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சித் தலைவரின் இருக்கையில் அமர்வது, ஊராட்சி மன்ற தலைவரின் கையொப்பங்களை போலியாக அரசு பதிவேடுகளில் போடுவது, ஊராட்சி மன்ற நிதிகளை தவறுதலாக கையாண்டு கையாடல் செய்வது போன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்பாடுகளில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

    மாதாந்திர கூட்டங்களை நடத்துவதே இல்லை. ஊராட்சி மன்ற கூட்டங்களை நடத்தியது போல் தீர்மானங்களை நிறைவேற்றி யது ,வார்டு உறுப்பினர்களின் கையொப் பங்களை அவரே போட்டுக் கொண்டு அதிகாரிகளை ஏமாற்றுகிறார். இதற்கு ஊராட்சி செயலாளரும் உடந்தையாக செயல்படுகிறார்.

    இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இது போன்ற பல வெளியில் தெரியவராத குளறுபடிகள் பல நடந்த வண்ணம் உள்ளன.

    ஆகவே எனது புகாரின் பேரில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுவதுடன் எங்கள் ஊராட்சி மன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் நிறைவேற்றப்பட்ட பணிகள் தொடர்பாக வெளிப்படை யான சிறப்பு தணிக்கையினை மேற்கொள்ள உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • புனித அந்தோணியார் திருவிழாவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் மாலை 6 மணி அளவில் சென்றுள்ளார் .
    • சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் அருண்குமார் (வயது 32 ) கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி மேல் நாரியப்பனூரில் உள்ள புனித அந்தோணியார் திருவிழாவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் மாலை6 மணி அளவில் சென்றுள்ளார் . ராயப்பனூர் செல்லும் சாலையில் உள்ள சுடுகாட்டு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திருவிழாவிற்கு சென்று உள்ளார்.

    பின்னர் மீண்டும் இரவு 11 மணி அளவில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து தருமாறு அருண்குமார் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் மகன் குமரேசன் (வயது 29) பெருமாள் மகன் செந்தில்குமார் (வயது 39 )ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பக்கத்து வீட்டுக்காரர் வீட்டு மாடியில் கூண்டு அமைத்து 50-க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார்.
    • பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் சென்று புறாக்களை மூடி வைக்குமாறு கூறினால் மிரட்டும் பாணியில் பேசுகிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சதீஷ்குமார் புகார் மனு அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது பக்கத்து வீட்டுக்காரர் வீட்டு மாடியில் கூண்டு அமைத்து 50-க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார். அந்தப் புறாக்கள் எங்கள் வீட்டில் வந்து தினமும் எச்சம் கழிக்கின்றன.

    இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு குழந்தைகளுக்கும் அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது.

    பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் சென்று புறாக்களை மூடி வைக்குமாறு கூறினால் மிரட்டும் பாணியில் பேசுகிறார்கள்.

    புறாக்கள் எச்சம் கழிப்பதை சுத்தம் செய்யும் போது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே தினமும் தகராறு ஏற்படுகிறது.

    இதனால் நோய் தொற்று ஏற்படும் என பயந்து என் மனைவி குழந்தைகளுடன் என்னைப் பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இது குறித்து பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தேன். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மரங்களை அகற்றி விட்டு சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இது பற்றி அந்த நபரிடம் கேட்டால் எங்களை மிரட்டுகிறார்.
    • இது பற்றி நாங்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட வள்ளுவர் நகர், அவ்வை பகுதிக்கு செல்லும் சாலையில் வசித்து வருபவர்கள் மருதாசம், சுகுணா, செல்வம், சின்னபொன்னு, ஆனந்தகுமார் ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    இந்த பகுதியில் உள்ள வீடுகள் தமிழ்நாடு வீட்டு வாரியத்தால் ஒதுக்கப்பட்ட 20 அடி சாலைக்கு வடக்குபுறம் அமைந்துள்ளது.

    அந்த 20 அடி சாலைக்கு தெற்கில் வீட்டுவசதி வாரியத்தால் மற்றொரு 30 அடி சாலையை ஒதுக்கியுள்ளனர். அந்த சாலைக்கு இருபுறமும் மரக்கன்றுகள் நடப்பட்டு மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த சாலை வழியாக நீதிமன்றம், சிப்காட் செல்லும் பிரதான சாலையாக அமைந்துள்ளது.

    இந்த பகுதி சாலையோரம் உள்ள மரங்களை அகற்றி விட்டு சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இது பற்றி அந்த நபரிடம் கேட்டால் எங்களை மிரட்டுகிறார்.

    இது பற்றி நாங்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சம்மந்தமாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    இதனால் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். மேலும் இதற்கு மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறியிருந்தனர்.

    • வட்டாட்சியரிடம் நாவிதர் சமூக மக்கள் புகார் மனு அளித்தனர்.
    • தகுதியற்ற பயனாளிகளுக்கு பட்டா வழங்க முயற்சி நடைபெறுகிறது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தகுதியற்ற பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுவதை தடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் நாவிதர் சமூக மக்கள் புகார் மனு அளித்தனர்.

    இதில் பென்னாகரம் அருகே செக்குமேட்டில் நாவிதர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது எனவும், இங்கே அவர்களின் எதிர்கால பயன்பாட்டிற்காக விடப்பட்டிருந்த இடத்தை தகுதியற்ற பயனாளிகளுக்கு பட்டா வழங்க முயற்சி நடைபெறுகிறது.

    அதனை தடுத்து நாவிதர் சமூக மக்களில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பென்னாகரம் வட்டாட்சியரிடம் நாவித சமூக மக்கள் புகார் மனு அளித்தனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
    • மூன்று குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது 30), அவரது கணவரும் ராணுவ வீரருமான செந்தில்குமார் (41) மற்றும் அவரது உறவினர்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்டோர், கட்டப்பஞ்சாயத்து செய்து தங்களை ஊர் பிரமுகர்கள் ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதாக நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி அடுத்த சின்ன அக்ரஹாரத்தை சேர்ந்த சிலர் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளி வைப்பதாக கட்டப்பஞ்சாயத்து நடத்தி அறிவித்தனர். இதுகுறித்து அப்போதே கே.ஆர்.பி. அணை போலீசில் புகார் அளித்தோம்.

    இதையடுத்து கட்டப் பஞ்சாயத்துகாரர்களை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஆனாலும் அவர்கள் எங்கள் குடும்பம் உள்பட, மூன்று குடும்பங்களை ஊரை விட்டு தள்ளி வைத்தனர்.

    தற்போது, ஊர் பொங்கல் பண்டிகைக்காக குடும்பத்திற்கு தலா, 500 வசூல் செய்தனர். இதில், எங்கள் குடும்பத்தார் மற்றும் உறவினர்களை தவிர்த்து விட்டனர். இது குறித்து கேட்டதற்கு உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளோம், வேண்டுமானால் போலீசில் புகார் கூறுங்கள் எனக் கூறினார்கள்.

    திருமணம், துக்க நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் நாங்கள் செல்லும்போது அவர்கள் எழுந்து சென்று விடுகின்றனர். எங்கள் குழந்தைகளுடன் மற்ற குழந்தைகள் பள்ளிகளில் கூட பேசுவதில்லை. பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க விடுவதில்லை.

    எங்கள் குடும்பத்தினர், எல்லையிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் எங்கள் குடும்பங்களை ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளனர். சமூக விரோத செயலில் ஈடுபடும் கட்டப்பஞ்சாயத்துகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அதிகாரிகளிடம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரர்களை நேரில் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • 21 நபர்களின் மனுக்களை மீண்டும் மறு விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மந்தவெளி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரர்களை நேரில் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 19 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே மனு அளித்து விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட சுமார் 80 நபர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களிடம் சட்டம் ஒழுங்கு, நில அபகரிப்பு மற்றும் பணமோசடி, தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் அளித்த மனு மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டதா, மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா என்பன போன்ற பல்வேறு விபரங்களை போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கேட்டறிந்தார். தொடர்ந்து சுமார் 21 நபர்களின் மனுக்களை மீண்டும் மறு விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், விஜய் கார்த்திக் ராஜா, கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்ரமணியன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, மது விலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

    • கிணற்றில் காளியம்மாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
    • தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த சாஸ்திரிமுட்லு கிராமத்தை சேர்ந்த திம்மப்பன்-காளியம்மாள் தம்பதியினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 பிள்ளை கள் உள்ளனர். போதிய வசதி இல்லாத காரணத்தால் திம்மப்பன் ஓசூர் பகுதிக்கு சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் காளியம்மா வுக்கும் அதிக பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக காளியம்மாள் கணவர் திம்மப்பன் வெளியூருக்கு வேலைக்கு செல்லாமல், உள்ளூரிலேயே இருந்து வந்துள்ளார். அப்போது காளியம்மாவுக்கு இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து, இருவரையும் கண்டித்து உள்ளார்.

    இதனால் கடந்த 6 மாத காலமாக காளியம்மாள் குறிப்பிட்ட அந்த நபருடன் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இரவு நேரங்களில் மது போதையில், திம்மப்பன் வீட்டு அருகே வந்து அந்த ஆசாமி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 11-ந் தேதி இரவு மீண்டும் அவர் திம்மப்பன் வீட்டு அருகே அமர்ந்து தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

    சம்பவத்தன்று இரவு காளியம்மாள் தனது கணவருடன் தகராறில் ஈடுபட்டவரை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நேரம் ஆகியம் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் உறவினர் வீட்டில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் கிடைக்காத நிலையில் மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இதனையடுத்து 4 நாட்களுக்கு பிறகு அதே பகுதியில் உள்ள கிணற்றில் காளியம்மாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆனால் காளியம்மாள் நன்றாக நீச்சல் தெரிந்த நிலையில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்வதற்கு வாய்ப்பில்லை என்று குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்தது.

    இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வயல்களில் இரவு நேரத்தில் கள்ளத்தனமாக மின்சாரம் பாய்ச்சுவதை அறிந்து அந்த பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்துபோ கடலை் தோட்டத்தில் இருந்த மின்கம்பியில் காளியம்மாவின் தலைமுடி சிக்கி இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்து மாரண்டள்ளி போலீசிடம் சாவில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளனர்.

    மேலும் திம்மப்பன் குடும்பத்தினர் தங்களுக்கு நீதி வேண்டும் என பல்வேறு இடங்களுக்கு சென்று மனு கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு மாத காலம் ஆகியும் இவர்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. அதனால் தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.

    தொடர்ந்து தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் அவ்வாறு இல்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கை களை மேற்கொள்ளப் போவதாகவும் இறந்த காளியம்மாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
    • தவறான சிகிச்சையால் கால் அகற்றம்

    கரூர்:

    கரூரில் தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட பெண் மனு அளித்துள்ளார்

    இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கரூர் காந்தி கிராமத்தைச் சேர்ந்த மேரிஜூவிட்சிலா என்பவர் கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கர்ப்பபை பிரச்சனைக்கு சிகிச்சைக்கு சென்றேன். அங்குள்ள, டாக்டர் எனக்கு கடந்த 4 தேதி, கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்தார்.

    அதபிறகு, வலது காலில் தொடர்ந்து வலி இருந்ததால், கோவையில் உள்ள தனியார் மருத்துவவனையில் மேல் சிகிச்சை பெற்றேன். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் காலில் ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்து, உடனடியாக அறுவை சிகிச்சை மூலம், அந்த காலை அகற்றினர்.

    கரூரில் உள்ள தனியார் மருத்துவமனை தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாகவே ஒரு காலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் சிகிச்சை தொடர் பான ஆவணங்களை கேட்டபோது, கொடுக்காமல், இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். எனவே, தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு உரிய இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • போனஸ் தொகையுடன் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.
    • குடும்ப கஷ்டங்களை காரணமாக தொடர்ந்து பணம் செலுத்த முடியவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் டி.வி. புத்தூர்பகுதியை சேர்ந்த22 பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். பின்னர் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2011 ஆம் ஆண்டில் எங்கள் ஊரை சேர்ந்த 4 பேர் தனியார் நிறுவனத்தில் மாதம் 300 வீதம் 70 மாதம் செலுத்தினால் போனஸ் தொகையுடன் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர். அதன் பேரில் மாதம்தோறும் மிக சிரமப்பட்டு பணம் செலுத்தி வந்தோம். ஆனால் குடும்ப கஷ்டங்களை காரணமாக தொடர்ந்து பணம் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் நாங்கள் கட்டிய லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மீண்டும் கேட்டால் மேற்படி நபர்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். ஆகையால் தனியார் நிறுவனத்திடம் இருந்து எங்களுக்கு சேர வேண்டிய தொகையை உடனடியாக பெற்று தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
    • 16 ஒன்றியங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும்

    அன்னூர்

    கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயலாளர் ஜெயபால் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், தி.மு.க.வை சேர்ந்த நீலகிரி எம்.பி.ஆ.ராசா, சமீபத்தில் இந்துக்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும், இந்த பேச்சு இந்து மதத்தையும், இந்து மக்களையும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தப்பட்டது.


    அப்போது,பாஜக விவசாய அணி மாவட்ட செயலாளர் விஜயகுமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலாளர் நாகம்மாள், ஆன்மீக அணி மாவட்ட தலைவர் வெள்ளியங்கிரி,ஒன்றிய தலைவர்கள் திருமூர்த்தி,ரத்தினசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் ஜெயபால் கூறுகையில் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா தலைமையில் உள்ள 16 ஒன்றியங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெறும் என்றார்.

    • கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.95 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
    • இதுகுறித்து முன்னாள் துணைவேந்தர்-அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது புகார் மனு கொடுக்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை அடுத்த ராமுதேவன்பட்டியை சேர்ந்தவர் நல்ல தம்பி (வயது 58), முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி. இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது சகோதரர் ரவிச்சந்திரன் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். இவரது மனைவி வள்ளி கொடைக்கானல் மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

    அப்போது கொடைக்கா னலில் வசித்து வந்த விஜய் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் தனது மனைவிக்கு பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தரும்படி கேட்டுக்ெகாண்டார்.

    இதுதொடர்பாக அவரும், நானும் மதுரை குறிஞ்சி நகரில் உள்ள வீட்டில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளி ஆகியோர் சந்தித்து பேசினோம்.

    அப்போது வேலைக்கு ரூ.25 லட்சம் தரும்படி கூறினார். இதைத்தொடர்ந்து விஜய் சிவகாசியில் உள்ள வீட்டில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளியை சந்தித்து எனது முன்னிலையில் ரூ.15 லட்சம் கொடுத்தார்.

    இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் எழுத்தர் பணி வாங்கி தரும்படி கேட்ட ஜெனிபர், சந்திரா, கிருஷ்ணம்மாள், சுகன்யா ஆகியோரிடம் இருந்து ரூ.23 லட்சம் வாங்கி ரவிச்சந்திரனிடம் கொடுத்தேன்.

    இதன் பின்னர் கணிதம், வேதியியல் பேராசிரியர் பணிக்காக கிரிஜா, சத்யா ஆகியோர் ரூ.45 லட்சம் ரவிச்சந்திரனிடம் கொடுத்தனர். மேலும் பூபாலன் என்பவர் பஞ்சாயத்து கிளாக் பணிக்காக ரூ.12 லட்சம் ரவிச்சந்திரனிடம் கொடுத்தார். மொத்தம் ரூ.95 லட்சம் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளியிடம் எனது முன்னிலையில் கொடுக்கப்பட்டது.

    இதற்கிடையே சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் கொடுத்த பணத்தை திரும்பி தரும்படி வற்புறுத்தினார். அப்போது ரவிச்சந்திரன் என்னிடம் ரூ.25 லட்சம் மட்டும் கொடுத்தார். இதில் ரூ.15 லட்சத்தை மட்டும் விஜயிடம் கொடுத்ேதன்.

    இந்தநிலையில் எனக்கு அறுவை சிகிச்சை நடை பெற்றதால் ரவிச்சந்தி ரனிடம் இருந்து பணத்தை பெற முடியவில்லை. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளி பெற்ற பணத்தை வாங்கி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×